Thursday, July 24, 2014

சரவணன் சுப்ரமணியன் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்
இணையதள எழுத்துக்கள் வழியாகவே உங்களை பழக்கம். நான் அதிகம் நவல்களை படித்தது இல்லை. சமீபத்தில் உங்கள் ஏழாம் உலகம் நாவலை வாசித்தேன். கொடுமையான ஒரு வாழ்க்கையை நேரில் கண்ட அனுபவம் பெற்றேன். எங்கள் ஊரில் தீர்த்தமலை அருகிலே பிச்சைக்காரர்களின் உலகம் உண்டு. அவர்கள் பெரும்பாலும் நாடோடிகள். இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கிற கசப்பான அடிமை வாழ்க்க்கை அவர்களுக்கு இருக்காது. உங்கள் எழுத்துக்கள் என்னை கதிகலன்கச்செய்தன. அம்மாடி என்ன ஒரு வாழ்க்கை என்ற நினைப்பு வந்தது.
ஆனால் அந்த மக்கலின் வாழ்க்கையைப் பார்த்தால் அதிலேயும் அன்பும் பாசமும் தியாகமும் இருக்கிறது. மனிதனின் நற்குணங்கள் எல்லா இடத்திலும் அவனுடன் வரும் அதனால்தான் அவன் மனிதன் இல்லையா? குப்பையிலே கிடந்தாலும் சந்தையிலே விற்கப்பட்டாலும் அவன் மனிதன் அல்லவா? அந்த எண்ணம்தான் என் மனதில் கிடைத்தது.
நன்றி ஜெயமோகன்
சரவணன் சுப்ரமணியன்
அன்புள்ள சரவணன்
தீர்த்தமலை எனக்கு நன்றாகத்தெரிந்த ஊர். ஏழாம் உலகம் பற்றிய உங்கள் கருத்துக்கள் அந்நாவலின் சாரத்துக்குள் நீங்கள் சென்றிருப்பதையே காட்டுகின்றன. மனிதன் அமிலத்தில் ஊறினால் எது மிஞ்சுகிறதோ அதுவே மனிதத்தன்மை அல்லவா?
நன்றி
ஜெ.

No comments:

Post a Comment